Monday, August 13, 2007

133. புரியாத ஆனந்தம்!

இலேசாக இருள் படர்ந்த ஒளியில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல், காதல் உணர்ச்சி மேலிடும் பெண்மையின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. S.ஜானகியின் குரல் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான். எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் அவர் பாடும் அழகே அழகு! இசையும், வரிகளும் கூட இரம்மியமாக இருக்கின்றன. அனுபவம் என்பது அதிகமில்லாத நிலையிலேயே இப்படி ஒரு படத்தைத் தந்த மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
-------------------------------------------
படம் : மௌனராகம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : ஜானகி & குழு
-------------------------------------------
பெ:
சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா
புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன்மொட்டு நானா? நானா?
(சின்ன)
பெ:
மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்றை நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி,
கு:
ம்....ம்....ம்.....
பெ:
மஞ்சம் தேடி
கு:
ம்.....ம்....ம்......
பெ:
மாலை சூடி,
கு:
ம்....ம்....ம்.....
பெ:
மஞ்சம் தேடி
கு:
ம்...ம்....ம்......
பெ:
காதல் தேவன் சந்நிதி காண..காணக்காண...காண
(சின்ன)
பெ:
மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக்கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக்கண்டேன்
இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே!
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே!
காலம் தோறும்
கு:
ம்.....ம்.....ம்....
பெ:
கேட்க வேண்டும்
கு:
ம்....ம்......ம்....
பெ:
காலம் தோறும்
கு:
ம்.....ம்.....ம்....
பெ:
கேட்க வேண்டும்
கு:
ம்....ம்......ம்....
பெ:
பருவம் என்னும் கீர்த்தனம் பாட..பாடப்பாட...பாட...
(சின்ன)

132. தென்றல் தொட்டதும் தூக்கம் போனது

முட்டம் மண்ணில் ஒரு மாலை நேரத்தை ரசித்துக்கொண்டிருந்தபோது மனமெல்லாம் வியாபித்திருந்த சந்தோஷத்திற்குக் காரணமாக அமைந்தவற்றில் ஒரு விஷயம் பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகள் உருவான மண் அது என்பது. மனதை நெகிழ வைக்கும் திரைப்படங்களை உருவாக்கும் வல்லமை படைத்தவர் பாரதிராஜா எனும் சின்னச்சாமி. இளையராஜா, வைரமுத்து இருவரும் காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர்த்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜானகியின் குரலும் அருமை.
-----------------------------------------------------
படம் : கடலோரக்கவிதைகள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : இளையராஜா & S.ஜானகி
-----------------------------------------------------
பெ:
அடியாத்தாடி
அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?
அடியம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா?
ஆ:
உயிரோடு
பெ:
உறவாடும்
ஆ:
ஒரு கோடி ஆனந்தம்
பெ:
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆ:
ஆ....அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?அடியம்மாடி.....

பெ:
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
உன்னப்பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டி பாடாதோ?
ஆ:
இப்படி நான் ஆனதில்லை, புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை, மூக்கு நுனி வேர்த்ததில்லை
பெ:
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பாத்தாயோ?
எச கேட்டாயோ?

லலலலலா...லலலலலா...

ஆ:
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்?
பெ:
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன?
ஆ:
கட்டுத்தறி காளை நானே, கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!
(அடியாத்தாடி)