Tuesday, January 03, 2006

7.அழகான மனைவி...அன்பான துணைவி!

படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)
வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!

(கல்யாணமாலை)
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!
(கல்யாணமாலை)

2 Comments:

Blogger b சொல்கிறார்.....

அருமை நண்பரே... தங்களின் பங்களிப்பை விடாமல் செய்யுங்கள். நல்ல பாடல்களாக தேர்வு செய்து தாருங்கள்.


அப்படியே http://www.thenkoodu.com சென்று உங்கள் வலைப்பூவை இணைத்தீர்கள் என்றால் நிறைய பேர் படிப்பார்கள்.

பிகு:- நான் மன்னார்குடி.

அன்புடன்,
மூர்த்தி
www.muthamilmantram.com

January 03, 2006 8:54 PM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

நன்றி..!!!!!
தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...!

January 03, 2006 11:00 PM  

Post a Comment

<< Home