Thursday, January 05, 2006

12.வாழ்வின் பொருள்......என்ன?

படம் : அவள் ஒரு தொடர்கதை
இசை : M.S.விஸ்வனாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : K.J.ஜேசுதாஸ்
---------------------------------------------------------------
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு!
இந்த ஊரென்ன? சொந்த வீடென்ன?
ஞானப் பெண்ணே?வாழ்வின் பொருளென்ன?
நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி!
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி!
ஆதி வீடு அந்தம் காடு!
இதில் நான் என்ன? அடியே! நீ என்ன? ஞானப் பெண்ணே!
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?உன்
மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்!
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி!
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி!
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞானப் பெண்ணே!
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்!
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்!
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி!
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி!
உண்மை என்ன பொய்மை என்ன?
இதில் தேன் என்ன? கடிக்கும் தேள் என்ன? ஞானப் பெண்ணே!
வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதை என்ன?
(தெய்வம்)

0 Comments:

Post a Comment

<< Home