Monday, January 09, 2006

15.நூறு வருஷம் நிலைப்பதில்லை

படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : சினேகன்
குரல் : கார்த்திக்
---------------------------------------------------------------
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்குத் தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன?
உண்மை என்ன உனக்கு புரியுமா?
வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே!
ஏ!... நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்ல பாரு!
(ஆடாத)
நித்தம் கோடி சுகங்கள் தேடி,
கண்கள் மூடி அலைகின்றோம்!
பாவங்களை மேலும் மேலும்,
சேர்த்துக் கொண்டே போகின்றோம்!
மனிதன் என்னும் வேடம் போட்டு,
மிருகமாக வாழ்கின்றோம்!
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து,
தீமைகளைச் செய்கின்றோம்!
காலம் மீண்டும் திரும்பாதே! பாதை மாறிப் போகாதே!
பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே!
(ஆடாத)
ஹே! கருவறைக்குள் தானாகக்
கற்றுக் கொண்ட சிறு ஆட்டம்!
தொட்டிலுக்குள் சுகமாகத் தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்யப் போராட்டம்!
காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே!
பேருக்காக ஒரு ஆட்டம்!
காசுக்காகப் பல ஆட்டம்!
எட்டுக்காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே
(ஆடாத)

0 Comments:

Post a Comment

<< Home