Tuesday, January 10, 2006

16.துரோகத்தைப் "போகி"யில் பொசுக்குகிறது நட்பு...!

படம் : தளபதி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம், K.J.ஜேசுதாஸ் & குழு
------------------------------------------------------------------------
காட்டுக் குயிலு மனசுக்குள்ளே,
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை! பாடத்தான்!
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு!
கவலை விட்டு கச்சைக்கட்டு! ஆடத்தான்!
(காட்டு)
குழு:
எல்லோரும் மொத்தத்திலே! சந்தோஷம் வெப்பத்திலே!
தள்ளாடும் நேரத்திலே! உல்லாசம் நெஞ்சத்திலே!
(காட்டு)
SPB :
போடா எல்லாம் விட்டுத் தள்ளு!
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு!
புதுசா இப்போ பொறந்தோ முன்னு எண்ணிக் கொள்ளடா டோய்!
KJJ:
பயணம் எங்கே போனால் என்ன?
பாதை நூறு ஆனால் என்ன?
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்! சும்மா நில்லடா டோய்!
SPB :
ஊதக்காத்து வீச, உடம்புக்குள்ள கூச,
குப்பக்கூளம் பத்த வச்சுக் காயலாம்
KJJ:
தை பொறக்கும் நாளை... விடியும் நல்ல வேளை
பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்
SPB&KJJ:
அச்சு வெல்லம், பச்சரிசி, வெட்டி வச்ச செங்கரும்பு,
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்..! ஹோய்!
(காட்டு)
SPB :
பந்தம் என்ன? சொந்தம் என்ன?
போனா என்ன? வந்தா என்ன?
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லே!
KJJ:
பாசம் வைக்க, நேசம் வைக்க,
தோழன் உண்டு, வாழவைக்க...!
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே!
SPB :
உள்ள மட்டும் நானே, உசிரக் கூடத்தானே,
KJJ:
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
SPB :
என் நண்பன் போட்ட சோறு, தினமும் தின்னேன் பாரு!
KJJ:
நட்பைக் கூடக் கற்பை போல எண்ணுவேன்
SPB&KJJ:
சோகம் விட்டு, சொர்க்கம் தொட்டு, ராகமிட்டு, தாளமிட்டு,
பாட்டுப்பாடும் வானம்படி நாம் தான்..!
(காட்டு)

0 Comments:

Post a Comment

<< Home