Friday, January 27, 2006

21.செம்புலப் பெயல் நீர் போல், கலந்த நெஞ்சங்கள்....!

படம் : இருவர்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல்: உன்னி கிருஷ்ணன்& பாம்பே ஜெயஸ்ரீ
------------------------------------------------------------------------
ஆ:
நறுமுகையே! நறுமுகையே!
நீயொரு நாழிகை நில்லாய்!
செங்கனி ஊறிய வாய் திறந்து,
நீயொரு திருமொழி சொல்லாய்!
அற்றைத் திங்கள் அந்நிலவில்,
நெற்றித்தரள நீர்வடிய,
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?
(அற்றை)
பெ:
திருமகனே! திருமகனே!
நீ ஒரு நாழிகை பாராய்!
வெண்ணிறப் புரவியில் வந்தவனே!
வேல்விழி மொழிகள் கேளாய்!
அற்றைத் திங்கள் அந்நிலவில்,
கொற்றப்பொய்கை ஆடுகையில்,
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா?
(அற்றை)
(நறுமுகையே)
ஆ:
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன?
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன?
பெ:
பாண்டிநாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன?
ஆ:
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
பெ:
இளைத்தேன், துடித்தேன், பொறுக்கவில்லை!
இடையினில் மேகலை இருக்கவில்லை!
(நறுமுகையே)
பெ:
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன?
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன?
ஆ:
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன?
பெ:
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்!உயிர்க்கொடி பூத்ததென்ன?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்!உயிர்க்கொடி பூத்ததென்ன?
ஆ:
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்,
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன?
(திருமகனே)

1 Comments:

Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

Thanks Seraa!

-j s gnanasekar

January 30, 2006 4:57 AM  

Post a Comment

<< Home