Sunday, March 26, 2006

59. மின்னலே!என் வானம் உன்னைத் தேடுதே!

இசையும், வரிகளும், படமாக்கப்பட்ட விதமும் அருமை!எனக்குப் பிடித்த வரிகள்,
"பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா? - ஒரு

பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா?
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா? - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா?"
-----------------------------------------------
படம் : மே மாதம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------
மின்னலே நீ வந்ததேனடி? - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி?
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி?
சில நாழிகை நீ வந்து போனது!
என் மாளிகை அது வெந்து போனது!
மின்னலே!என் வானம் உன்னைத் தேடுதே!
(மின்னலே)
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே! - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே!
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே! - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே!
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்!
(மின்னலே)
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா? - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா?
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா? - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்!
(மின்னலே)

1 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

அருமை நண்பரே
எனக்கு மிகவும் பிடித்த பாடல்

September 01, 2006 2:12 AM  

Post a Comment

<< Home