Wednesday, March 08, 2006

51. தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்!

தமிழில் சில திரைப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் மரகதமணியின் அற்புதமான இசையை இந்தப் பாடலிலேயே கண்டுகொள்ளலாம். புலமைப்பித்தனின் வரிகள்,

"தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு,
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம்கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்"

என்னும் புரட்சிக் கவிஞரின் பாடலை நினைவுபடுத்துகின்றன
------------------------------------------------------
படம் : அழகன்
இசை : மரகதமணி
வரிகள் : புலமைப்பித்தன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------
சாதி மல்லிப் பூச்சரமே! சங்கத் தமிழ்ப் பாச்சரமே!
ஆசையென்ன ஆசையடி? அவ்வளவு ஆசையடி!
எங்கெங்கே முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ!
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்!
கண்ணித் தமிழ்த் தொண்டாற்று, அதை முன்னேற்று,
பின்பு கட்டிலில் தாலாட்டு!
(சாதி மல்லிப்)
எனது வீடு, எனது வாழ்வு, என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்!
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்!
கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது!
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்!
கேட்டுக்கோ ராசாத்தி! தமிழ் நாடாச்சு!
இந்த நாட்டுக்கு நாமாச்சு!
(சாதி மல்லிப்)
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்!உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்!
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி!
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி!
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா?
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்...!
உன்னைப் போல் எல்லோரும், அட இந்நேரம்,
இந்த இன்பத்தில் தேனூறும்!
(சாதி மல்லிப்)

0 Comments:

Post a Comment

<< Home