Monday, March 20, 2006

53. தீயோடு போகும் வரையில்...தீராது இந்தத் தனிமை!

செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, முத்துக்குமார் கூட்டணியில் இசையில் பரபரப்பாகக் கலக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் இது! வழக்கம் போல இசை பிரமாதம்! வரிகளில் அனுபவ முதிர்ச்சி காட்டுகிறார் முத்துக்குமார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது!
---------------------------------------------
படம் : புதுப்பேட்டை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துக்குமார்
குரல் : யுவன் ஷங்கர் ராஜா
---------------------------------------------
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப் போகாது!
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது!
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்?
அத்தனை கண்ட பின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்!
ஓ!கருவாசல் விட்டு வந்த நாள் தொட்டு,
ஓ!ஒரு வாசல் தேடியே விளையாட்டு,
ஓ!கண் திறந்து பார்த்தால் பல கூத்து,
ஓ!கண் மூடிக் கொண்டால்....!
ஓஹோஹோ!

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்,
வந்தவை போனவை வருத்தமில்லை!
காட்டினிலே வாழ்கின்றோம்,
முட்களில் வலியுண்டு மரணமில்லை!
இருட்டினிலே நீ நடக்கையிலே,
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்!
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே,
உனக்குத் துணை என்று விளங்கிவிடும்!
தீயோடு போகும் வரையில்...
தீராது இந்தத் தனிமை!
கரை வரும் நேரம் பார்த்து,
கப்பலில் காத்திருப்போம்!
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர்த்தொடுப்போம்!
ஓ!அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே,
ஓ!இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே,
ஓ!மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே,
ஓ!அந்தக் கடவுளைக் கண்டால்...!
ஓஹோஹோ!

அது எனக்கு, இது உனக்கு,

இதயங்கள் போடும் தனிக்கணக்கு!
அவள் எனக்கு, இவள் உனக்கு,
உடல்களும் போடும் புதிர்க் கணக்கு!
உனக்குமில்லை, இது எனக்குமில்லை,
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்!
நல்லவன்தான், அட கெட்டவன்தான்,
கடைசியில் அவனே முடிவு செய்வான்!
பழி போடும் உலகம் இங்கே!
பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று,
அத்தனையும் பார்த்திருப்போம்!
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்!
ஓ!பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக் கொள்வோம்,
ஓ!பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓ!கதை முடியும்போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓ!மறு பிறவி வேண்டுமா?

3 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna சொல்கிறார்.....

எனக்கும் இந்த பாட்டு முதல் முறை கேட்டவுடன் ரொம்பப் பிடித்துவிட்டது. எனக்குப் பிடித்த வரிகள்:

"இருட்டினிலே நீ நடக்கையிலே,
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்!
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே,
உனக்குத் துணை என்று விளங்கிவிடும்!"

திரையில் பார்க்கக் காத்திருக்கிறேன்.

March 20, 2006 10:57 PM  
Blogger கண்ணன் சொல்கிறார்.....

வார்த்தைகள் தெளிவாக புரியும் அருமையான பாடல்.
//கரை வரும் நேரம் பார்த்து,
கப்பலில் காத்திருப்போம்!
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர்த்தொடுப்போம்!
//
நல்ல வரிகள்.

March 21, 2006 12:56 AM  
Blogger சீனு சொல்கிறார்.....

//வார்த்தைகள் தெளிவாக புரியும் அருமையான பாடல்.
//

அதுதானே "இளைய" டாசா யுவனின் success formula.

March 27, 2006 12:18 AM  

Post a Comment

<< Home