Monday, March 27, 2006

62.கல்லைக் கலையாக்கும் வித்தை கற்றவள்...காதலி!

ஒளிப்பதிவாளர் ஜீவாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசையும் பாடல் வரிகளும் அருமை. சிறிய இடைவெளிக்குப் பிறகு பாடியிருக்கிறார் உன்னி கிருஷ்ணன்.
-----------------------------------------------------
படம் : உள்ளம் கேட்குமே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & ஹரிணி
-----------------------------------------------------
கு:
யார் வந்தது? யார் வந்தது?
உன் நெஞ்சிலே யார் வந்தது?
போர் வந்தது போர் வந்தது,
உள் நெஞ்சிலே போர் வந்தது!
பூ வந்தது, பூ வந்தது,
கை வீசிடும் பூ வந்தது!
தீ வந்தது, தீ வந்தது,
பூக்கண்களில் தீ வந்தது!
ஏன் வந்தது? ஏன் வந்தது?
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்!
பெண் வந்ததும், பெண் வந்ததும்,
உன் சூழலில் சத்தம் சத்தம்!
ஆ:
மழை மழை, என் உலகத்தில் வருகின்ற முதல் மழை!
நீ முதல் மழை!
அலை அலை, என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை!
நீ முதல் அலை!
என்ன திண்மை! என்ன வன்மை!
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்!
போகப் போக புரிகின்ற போர்க்களம்!
ஒன்று செய், இப்போதே உள் நெஞ்சை உடையச் செய்!
(மழை)
ஆ:
நீ மட்டும் ம் என்றால் உடலோடு உடல் மாற்றச் செய்வேனே!
பெ:
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டுச் செல்வேனே!
ஆ:
அடி பருவப் பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே..!
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே...!
பெ:
பூவின் உள்ளே ஒரு தாகம், உன் உதடுகள் தா!
(யார்)
(மழை)
பெ:
தீண்டாமல் சருகாவேன், நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்!
ஆ:
ஐயோடீ நான் கல்லாவேன், உளியாக நீ வந்தால் கலையாவேன்!
பெ:
ஏ நீயும் ஓடி வந்து என்னைத் தீண்டத் தீண்ட பாரு..!
ஒரு பாதரசம் போல நான் நழுவிச் செல்வேன் தேடு...!
ஆ:
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில்.... ஏன் ..?
(மழை)

0 Comments:

Post a Comment

<< Home