Saturday, January 28, 2006

29.அன்பே சிவம்!

படம் : அன்பே சிவம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : கமல்ஹாசன்&குழு
---------------------------------------------------------------
ஆ:
யார் யார் சிவம்? நீ, நான், சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
(யார்)
ஆ:
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!
கு:
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்...!
(யார்)
ஆ:
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்!
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!
(அன்பே)
(யார்)
ஆ:
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா!
(அன்பே)
(யார்)

2 Comments:

Blogger Sud Gopal சொல்கிறார்.....

இந்தப் பாடலில் இன்னும் சில வரிகள் இருப்பதா ஞாபகம்."அன்பின் நீளம் எதுவோ அது வானின் நீளமடா" என்றெல்லாம் வரும் என நினைக்கிறேன்.

பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறீர்கள்.
தொடர்ந்து கலக்கவும்.

January 30, 2006 1:08 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

thank u for ur comment!
I forgot to add those lines...
now i've done it.

January 30, 2006 3:13 AM  

Post a Comment

<< Home