Saturday, January 28, 2006

25.சர்வம்....தெய்வீகம்!

படம் : ஆண்டவன் கட்டளை
இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.சுசீலா
-------------------------------------------------------------
அழகே வா! அருகே வா!
அலையே வா! தலைவா வா!
அழகே வா! வா! வா! அழகே வா!
(அழகே)
ஆலயக் கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே!
(ஆலய)
(அழகே)
ஒரு கேள்வியை இங்கே கேட்டுவிட்டேன்!
நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்?
என்ன தேடுகின்றாய்? எங்கே ஓடுகின்றாய்?
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்?
(உந்தன்)
(அழகே)
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்!
அந்த ஓடத்தில் உலகம் கூடிவரும்!
நம் முன்னவர்கள், வெறும் முனிவரில்லை!
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை!
(அவர்)
(அழகே)

0 Comments:

Post a Comment

<< Home