Saturday, January 28, 2006

26.ஊர் சிரிக்க, அழும் நிலவு...

படம்:ஆயிரத்தில் ஒருவன்
இசை : M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : T.M.சௌந்தரராஜன்
------------------------------------------------
ஓடும் மேகங்களே! ஒருசொல் கேளீரோ?
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ?
(ஆடும்)
(ஓடும்)
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்!
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்!
மாளிகையே அவள் வீடு! மரக்கிளையில் என் கூடு!
வாடுவதே என் பாடு!
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு!
(ஓடும்)
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு!
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு!
பாதையிலே வெகுதூரம், பயணம் போகின்ற நேரம்,
காதலையா மனம் தேடும்?
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு!
(ஓடும்)

0 Comments:

Post a Comment

<< Home