Saturday, January 28, 2006

27.அமிலம் வீசிப்போன, அவளுக்காக...!

படம் : அமர்க்களம்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------------------------
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு!
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு!
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு!
மோகனமே உன்னைப் போல - என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை!
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல -
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை!
(மேகங்கள்)
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்!
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே!
என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்!
(மேகங்கள்)
கண்ணிமையில் சாமரங்கள் வீசும் காற்றில் - என்
காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்!
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம் - அடி
தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்!
(மேகங்கள்)
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்! - உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்?
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் - என்
இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்!
(மேகங்கள்)
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் - மண்ணை
முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி!
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே! - நாம்
உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி...!
(மேகங்கள்)

0 Comments:

Post a Comment

<< Home