Thursday, February 16, 2006

38.இயற்கையோடு பயணம் முடிவதில்லைதான்.....

படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்

-----------------------------------------------------------
இளைய நிலா பொழிகிறது! இதயம் வரை நனைகிறது!
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே! விழாக்காணுமே!
வானமே!
(இளைய நிலா)
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்.
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்.
வான வீதியில் மேக ஊர்வலம்!
காணும்போதிலே ஆறுதல் தரும்!
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்!
(இளைய நிலா)
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!
நீல வானிலே வெள்ளி ஓடைகள்!
ஓடுகின்றதே எண்ண ஜாடைகள்!
விண் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்?
(இளைய நிலா)

2 Comments:

Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

//முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ//
இதுகூட நம்ம வைரமுத்தா?

//கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்//

//டெண்டு கொட்டாய் இன்டெர்வல் முறுக்கே//

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று ஒன்று படித்தேன்

"வாழ்ந்துகெட்ட சீமாட்டி
வளவிமட்டும் அணிந்ததுபோல்"

-ஞானசேகர்

February 16, 2006 10:00 PM  
Blogger Chandravathanaa சொல்கிறார்.....

azhahiya varikal
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

February 20, 2006 5:54 AM  

Post a Comment

<< Home