Wednesday, February 01, 2006

33.மனம் போல் கொண்டாடலாம்!

படம் : அடுத்த வாரிசு
இசை : இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
குரல் : மலேசியா வாசுதேவன்
----------------------------------------------------------------
ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவை, வா!
போதும் போதும் என, போதை சேர்ந்து வர, வா!
தினம் ஆடிப் பாடலாம், பல ஜோடி சேரலாம்!
மனம் போல் வா கொண்டாடலாம்!
மனம் போல் வா கொண்டாடலாம்!
(ஆசை)
முத்துரதம் போல சுற்றி வரும் பெண்கள்,
முத்தமழை தேனாக..!
வந்தவரை லாபம் கொண்டவரை மோகம்,
உள்ளவரை நீ ஆடு!
ஆகா பெண்கள் நாலு வகை, இன்பம் நூறு வகை, வா...!
தினம் நீயே செண்டாகவே, அங்கு நான் தான் வண்டாகவே!
(ஆசை)
என்ன சுகம் தேவை? எந்த விதம் தேவை?
சொல்லித் தர நானுண்டு!
பள்ளியிலே கொஞ்சம், பஞ்சணையில் கொஞ்சம்,
அள்ளித்தர நீயுண்டு!
அந்த சொர்க்கம் மண்ணில் வரும், சொந்தம் கண்ணில் வரும் வா..!
தினம் நீயே செண்டாகவே, அங்கு நான் தான் வண்டாகவே!
(ஆசை)

3 Comments:

Blogger Pavals சொல்கிறார்.....

நாலு வருஷமா என்னோட செல்போன்'ல நான் மாத்தாம வச்சிருக்கிற ரிங்டோன் இதுதான்..ராஜா - வாசுதேவன், காம்பினேஷன்ல வந்த குத்து பாட்டுகள்ல இது தாங்க எப்பவும் நம்.1

February 01, 2006 3:52 AM  
Blogger சிறில் அலெக்ஸ் சொல்கிறார்.....

நண்பனின் கல்யாண மேடையில் பாடி ஆடிய ஞாபகம்...

தொடரட்டும் உங்கள் நற்பணி.... வெறும் வரிகளோடு.. நீங்கள் அதில் என்ன சிறப்பாக ரசிக்கிறீர்கள் என்பதையும் எழுதலாமே?

February 01, 2006 5:28 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

thank u...

That's is the reason, why I created this blog.

But due to lack of time, I could not do it. I will try it out....

February 01, 2006 9:15 PM  

Post a Comment

<< Home