Saturday, January 28, 2006

30.கவிதை...கவிதைக்காக....!கவியும்தான்!

படம் : கேப்டன் மகள்
இசை : ஹம்சலேகா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------------
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ?
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது!
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)
கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா?
தெரித்து ஓடுதே அதுவா?
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன் !
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)
முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா?
தள்ளி உள்ளதே அதுவா?
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடுவுகின்றதே அதுவா?
தடுவுகின்றதே அதுவா?
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா?
ஓரிரு வார்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னை தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)

4 Comments:

Blogger supersubra சொல்கிறார்.....

என் சுவாசக்காற்றே படத்தின் தீண்டாய் மெய் தீண்டாய் பாடல் முடிந்தால் பதிப்பிக்கவும்

January 28, 2006 3:45 AM  
Blogger Sud Gopal சொல்கிறார்.....

This comment has been removed by a blog administrator.

January 30, 2006 1:03 AM  
Blogger Sud Gopal சொல்கிறார்.....

Vairamuthu

January 30, 2006 1:04 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

கருத்துக்கு நன்றி சுதர்சன்.
வைரமுத்துவின் பெயரைச் சேர்த்துவிட்டேன்.

ப்ரியமுடன்,
சேரல்

March 30, 2007 12:54 AM  

Post a Comment

<< Home