Wednesday, February 01, 2006

34.எல்லாம் தெளிந்த மனிதன்(??!!) இவன்...

படம் : பிதாமகன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : மது பாலகிருஷ்ணா
------------------------------------------------------------------------
பிறையே! பிறையே! வளரும் பிறையே! இது நல்வரவே!
மலரே! மலரே! மலர்ந்தாய் மலரே! உனக்கேன் தளர்வே!
பயணம், எவர்க்குமிங்கு முடியும், இங்கு பிறந்தாயே!
உதயம், உனக்கு இங்கு தொடக்கம், விழிகள் திறந்தாயே!
(பிறையே)
தன்னந்தனியனாக, மண்ணில் வர ஏங்கினாயோ?
என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ?
சோலையில் நின்ற போதிலும்,
அது பாலையே என்ற போதிலும்,
பூவெல்லாம் என்றும் பூக்களே!
இங்கு மாறுமா அதன் பெயர்களே?
குடிசை என்ன செய்யும்? கோட்டை என்ன செய்யும்?
உன்னை மாற்றுமா?
(பிறையே)
ஊர்வலங்கள் எல்லாம், வரும் உன்னை நோக்கித்தானே!
ஊரும் உறவும் ஏது? எல்லாம் உனக்கொன்றுதானே!
பணத்திலே தினம் புரண்டவர்,
பெரும் பதவியில் தலை கனத்தவர்,
புகழிலே எல்லை போனவர்,
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்!
இந்த பேதமெல்லாம் வெந்து போகக்கண்டு,
தெளிந்த மனிதன் நீ!
(பிறையே)

2 Comments:

Blogger Sud Gopal சொல்கிறார்.....

It is not Vaali.the entire album has been written by Palanibarathi.

February 01, 2006 10:11 PM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

I think it's Valee only...
Somebody plz, make it clear.

February 02, 2006 5:50 AM  

Post a Comment

<< Home