Sunday, January 29, 2006

31.இதழ்களில் பனித்துளி..! பருகிடும் கதிரொளி!

படம் : என் சுவாசக்காற்றே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்&சித்ரா
----------------------------------------------------------------
பெ:
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கு முதவாது
பசலை யுணீஇய வேண்டும்
திதலை யாகத்தென் மாமைக் கவினே!

தீண்டாய்! மெய் தீண்டாய்! தாண்டாய்! படி தாண்டாய்!
பெ:
தீண்டாய்! மெய் தீண்டாய்! தாண்டாய்! படி தாண்டாய்!
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே!
என் நரம்போடு வீணை மீட்டியதே!
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே...!
ஆ:
தீண்டாய்! மெய் தீண்டாய்! தாண்டாய்! படி தாண்டாய்!
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ!
உன் நரம்போடு வீணை மீட்டியதோ!
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ...!
(தீண்டாய்)
பெ:
விழியோடும் தீண்டல் உண்டு, விரலோடும் தீண்டல் உண்டு,
இரண்டோடும் பேதம் உள்ளது!
ஆ:
விழித்தீண்டல் உயிர் கிள்ளும், விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்,
அதுதானே நீ சொல்வது?
பெ:
நதியோரப் பூவின்மேலே, ஜதிபாடும் சாரல் போலே,
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ...?
ஆ:
ஒரு கன்னம் தந்தேன் முன்னே, மறு கன்னம் தந்தாய் பெண்ணே,
ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ?
பெ:
உறவின் உயிரே! உயிரே! என்னைப் பெண்ணாய்ச் செய்க!
ஆ:
அழகே! அழகே! உன் ஆசை வெல்க!
(தீண்டாய்)
ஆ:
கடலோடு முத்தம் தந்தும், கலையாத வானம் போல,
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ!
பெ:
உடலோடு அங்கும் இங்கும், உறைகின்ற ஜீவன் போல,
உன்னோடு கட்டிக்கொள்ளவோ!
ஆ:
உனைத் தேடி மண்ணில் வந்தேன், எனைத்தேடி நீயும் வந்தாய்,
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்!
பெ:
பல பேர்கள் காதல் செய்து, பழங்காதல் தீரும்போது,
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்!
ஆ:
பனியோ? பனியின் துளியோ? உன் இதழ்மேல் என்ன?
பெ:
பனியோ? தேனோ? நீ சுவைத்தால் என்ன?
(தீண்டாய் )

1 Comments:

Blogger Chandravathanaa சொல்கிறார்.....

பெ:
விழியோடும் தீண்டல் உண்டு, விரலோடும் தீண்டல் உண்டு,
இரண்டோடும் பேதம் உள்ளது!
ஆ:
விழித்தீண்டல் உயிர் கிள்ளும், விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்,
அதுதானே நீ சொல்வது?

February 20, 2006 5:46 AM  

Post a Comment

<< Home