Thursday, February 23, 2006

45. என்ன விலை அழகே?

இசையினாலேயே மாபெரும் வெற்றியைப் பெற்றத் திரைப்படம் இது. எதுகை, மோனை, இயைபு எல்லாவற்றிலும் வல்லவரான வாலியின் திறமை இந்தப் பாடலிலும் நன்கு தெரியும். வயது ஏற ஏற, இவரின் கவித்திறன் கூடுகிறது என்று கூடச் சொல்லலாம்.

"பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று!"

"உன் புகழ் வையமும் சொல்ல,
சித்தன்ன வாசலில் உள்ள,
சித்திரம் வெட்குது மெல்ல!"

இவை எனக்குப் பிடித்த வரிகள்...
------------------------------------------------------
படம் : காதலர் தினம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வாலி
குரல் : உன்னி மேனன்
------------------------------------------------------
என்ன விலை அழகே?
என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல் மெளனமாகிறேன்.
(என்ன)
படைத்தான் இறைவன் உனையே!
மலைத்தான் உடனே அவனே!
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது, என் விழி சேர்ந்தது.
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீணை உன் மேனி, மீட்டட்டும் என் மேனி.
விரைவினில் வந்து கலந்திடு!
விரல் பட மெல்ல கனிந்திடு!
உடல் மட்டும் இங்கு கிடக்குது!
உடன் வந்து நீயும் உயிர் கொடு!
பல்லவன் சிற்பிகள் அன்று,

பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று! சிலையே!
(பல்லவன்)
உந்தன் அழகுக்கில்லை ஈடு!
(என்ன)
உயிரே உனையே நினைந்து,
விழிநீர் மழையில் நனைந்து,
இமையில் இருக்கும் இரவு உறக்கம்,
கண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு.
நிலவு எரிக்க, நினைவு கொதிக்க,
ஆராத நெஞ்சாச்சு, ஆகாரம் நஞ்சாச்சு.
தினம் தினம் உனை நினைக்கிறேன்,
துரும்பென உடல் இளைக்கிறேன்.
உயிர் கொண்டு வரும் பதுமையே!
உனைவிட இல்லை புதுமையே!
உன் புகழ் வையமும் சொல்ல,

சித்தன்ன வாசலில் உள்ள,
சித்திரம் வெட்குது மெல்ல! உயிரே!
(உன் புகழ்)
உனை நானும் சேரும் நாள் தான்!
(என்ன)

1 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

ஓ போடு , எனக்கும் இந்த பாட்டு பிடித்திருக்கிறது ஏனென்றால் பாட்டு வரியும் பாடியவிதமும் நன்றாக உல்லது.

March 19, 2006 7:48 AM  

Post a Comment

<< Home