Thursday, February 23, 2006

46. அவளின் சிரிப்புக்குள் சிறைப்படுவதே ஆனந்தம்

நல்ல பாடலாசிரியர்கள் நிறைய பேர் தமிழ்த்திரையுலகில் இருக்கிறார்கள் என்பதை இது போன்ற பாடல்கள் தெரியப்படுத்துகின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் புதுமையான இந்த மெட்டுக்கு அருமையான வரிகளைக் கொடுத்த பாடலாசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும். ஷங்கர் மகாதேவனின் குரல் இந்தப் பாடலுக்கு, மேலும் மெருகூட்டுகிறது.
------------------------------------------------------
படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : காமகோடியான்
குரல் : ஷங்கர் மகாதேவன்
-------------------------------------------------------
என் அன்பே! என் அன்பே!
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி!
என் அன்பே! என் அன்பே!
என் நெஞ்சுக்குள் காதல் வலி!
என் உடலின்று கடலானதே!
என் உயிருக்குள் அலையாடுதே!
இந்தப் பாறைக்குள் பனி பாய்ந்ததே!
என் விரதத்தில் விளையாடுதே!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே)
விழி பட்ட இடம் இன்று, உளி பட்ட சிலையாக,
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி!
புது பார்வைப் நீ பார்த்து, புது வார்த்தை நீ பேசி,
இதயத்தை இடம் மாறச் செய்தாயடி!
மெல்லிடை கொண்டு நடைகள் போடும்,
அழகான பெண்ணே!
முப்படை கொண்டு எனைச் சுற்றி வளைத்தாயடி!
என் உறக்கத்தைத் திருடிச் சென்று,
உறவாடும் பூவே!
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்!
அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்!
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்!
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்!
இனி என்ன சொல்லுவேன் இன்று?
நான் அமுத நஞ்சையும் உண்டு,
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே...!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே)

0 Comments:

Post a Comment

<< Home