Thursday, February 23, 2006

44.காத்திருக்கிறேன்...நிலமாக...!வருவாயா மழையாக...?

இந்தப் பாடலைப் பாடிய உமாரமணனைப் பெரும்பாலான இளைய தலைமுறையினருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். இவர் சன்.டி.வி யில், "சப்த ஸ்வரங்கள்" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரமணனின் மனைவி. 80 களில் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்தவர். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை.
---------------------------------------------------------
படம் : தென்றலே என்னைத் தொடு
இசை : இளையராஜா
வரிகள் :
குரல் : K.J.ஜேசுதாஸ்& உமா ரமணன்
---------------------------------------------------------
பெ:
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே...!
ஆ:
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் என்னருகே...!

(கண்ணனே)
ஆ:
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா? மீனா?
பெ:
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
(நீலம்)
ஆ:
கள்ளிருக்கும்
பெ:
பூவிது பூவிது
ஆ:
கையணைக்கும்
பெ:
நாளெது நாளெது
ஆ:
பொன்னென மேனியும்
பெ:
மின்னிட மின்னிட
ஆ:
மெல்லிய நூலிடை
பெ:
பின்னிட பின்னிட
ஆ:
வாடையில் வாடிய
பெ:
ஆடையில் மூடிய
ஆ:
தேர்..
பெ:
நான்.. .
(கண்மணி)
ஆ:
ஆசை தீர பேச வேண்டும். வரவா? வரவா?
பெ:
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா! மெதுவா!
(ஆசை)
ஆ:
பெண் மயங்கும்
பெ:
நீ தொட நீ தொட
ஆ:
கண்மயங்கும்
பெ:
நான் வர நான் வர
ஆ:
அங்கங்கு வாலிபம்
பெ:
பொங்கிட பொங்கிட
ஆ:
அங்கங்கள் யாவிலும்
பெ:
தங்கிட தங்கிட
ஆ:
தோள்களில் சாய்ந்திட
பெ:
தோகையை ஏந்திட
ஆ:
யார்...?
பெ:
நீ....!
(கண்மணி)

1 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்.....

These all songs are really nice. I am the fan of Maestro. Now i am dubai. But still i am collecting illayaraja songs. Thanks and pls continue.

May 04, 2006 11:22 PM  

Post a Comment

<< Home