Monday, March 27, 2006

63. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்!

பாடல் வேறு, கவிதை வேறு என்ற இலக்கணத்தை மாற்றியவர்களில் முக்கியமானவர் வைரமுத்து. இப்பாடல் வரிகளைக் கேட்கும்போதும் இதை உணர முடியும். இளையராஜாவின் இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம் இது...!
----------------------------------------------------
படம் : நினைவுள்ளவரை நித்யா
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------
ஆ:
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்!
பொன்மேகம் நம் பந்தல்!
உன் கூந்தல் என் ஊஞ்சல்!
உன் வார்த்தை சங்கீதங்கள்..ஆ..!
(ரோஜாவை)
ஆ:
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை!
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை!
பெ:
மௌனமே சம்மதம் என்று,
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ...!
(ரோஜாவை)
பெ:
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்1 இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்!
ஆ:
பூவிலே மெத்தைகள் தைப்பேன்!
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்!
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஓ...!
(ரோஜாவை)

1 Comments:

Blogger Bharaniru_balraj சொல்கிறார்.....

வைரமுத்துவின் வைர வரிகள்.

கார்த்திக், மற்றும் ஜி ஜி நடித்தது,

அப்படியிருந்த கார்த்திக் இப்ப இப்படி ஆயிட்டாரே

April 28, 2006 2:33 AM  

Post a Comment

<< Home