Tuesday, April 04, 2006

64. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளைப் பனித்துளி ஆவேனோ?

ஓர் ஐந்து நிமிடங்களுக்கு என்னை மறக்கச் செய்யும் பாடல் இது....! இசை, வரிகள், பாடல், படமாக்கப்பட்ட விதம் எல்லாவற்றிலும் என்னை அசத்திய மிகச்சில பாடல்களில் இதுவும் ஒன்று. அந்தச் சின்ன செடியாகட்டும், விக்ரம் தண்ணீர் குடிக்கும் காட்சியாகட்டும், அருவி விழும் காட்சியாகட்டும், எல்லாமுமே நம்மை எங்கோ இழுத்துச் செல்கின்றன...! எனக்குப் பிடித்தவரிகள்...எல்லா வரிகளும்......
------------------------------------------------------
படம் : சாமுராய்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன்
------------------------------------------------------
மூங்கில் காடுகளே! வண்டு முனகும் பாடல்களே!
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே!
ஹோ! ஹோ! ஹோ! ஹோ!
(மூங்கில்)
இயற்கைத் தாயின் மடியைப் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து?
சலித்துப் போனேன் மனிதனாய் இருந்து...
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து...
திரிந்து, பறந்து, பறந்து.....!
(மூங்கில்)
சேற்றுத் தண்ணீரில், மலரும் சிவப்புத் தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறதே!
வேரை அறுத்தாலும், மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை!
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியும்!
தாமரைப் பூவாய் மாறேனோ?
ஜென்ம சாபல்யங்கள் காண்பேனோ?
மரமாய் நானும் மாறேனோ?
என் மனிதப் பிறவியில் உய்யேனோ?
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளி ஆவேனோ?
(மூங்கில்)
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது!
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்துப் போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டித் தன்னை நீட்டித்துக் கொள்கிறதே!
மேகமாய் நானும் மாறேனோ?
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ?
சூரியன் போலவே மாறேனோ?
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ?
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ?
(மூங்கில்)

1 Comments:

Blogger Mathiv சொல்கிறார்.....

அருமையான வரிகள்....வைரமுத்து த கிரேட்...

December 27, 2008 10:08 AM  

Post a Comment

<< Home