Friday, February 17, 2006

39.பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை பேசுகிறது!

படம் : சொல்ல(த்) துடிக்குது மனசு
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------
பூவே! செம்பூவே! உன் வாசம் வரும்!
வாசல், என் வாசல், உன் பூங்காவனம்!
வாய் பேசிடும், புல்லாங்குழல்!
நீதானொரு பூவின் மடல்!
(பூவே)
நிழல் போல நானும், நடை போட நீயும்,
தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம்!
கடல் வானம் கூட, நிறம் மாறக் கூடும்,
நான் கொண்ட பாசம், தடம் மாறிடாது!
நான் வாழும் வாழ்வே, உனக்காகத்தானே!
நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே!
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே!
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்!
(பூவே)
உனைப்போல நானும், ஒரு பிள்ளை தானே!
பலர் வந்து கொஞ்சும், கிளிப் பிள்ளை நானே!
உனைப்போல நானும், மலர் சூடும் பெண்மை!
விதி என்னும் நூலில், விளையாடும் பொம்மை!
நான் செய்த பாவம், என்னோடு போகும்!
நீ வாழ்ந்து நான்தான், பார்த்தாலே போதும்!
இந்நாளும், எந்நாளும், உல்லாசமே!
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்!
(பூவே)

0 Comments:

Post a Comment

<< Home