Wednesday, April 05, 2006

66. சங்கீதம் சந்தோஷம்!

M.S.விஸ்வநாதனின் துள்ளல் இசையில், S.P.Bன் குரல் ஜாலத்தில்...ஜாலியான பாட்டுதான்! வெறொன்றும் சொல்வதற்கில்லை.
-------------------------------------------------
படம் : நினைத்தாலே இனிக்கும்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-------------------------------------------------
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்!
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்!
(எங்கேயும்)
கட்டழகுப் பெண்ணிருக்கு!
வட்டமிடும் பாட்டிருக்கு!
தொட்ட இடம் அத்தனையும்,
இன்பமின்றி துன்பமில்லை!
ரா ரா ரா ரி…ஓ!
(எங்கேயும்)
காலம் சல்லாபக் காலம்!
உலகம் உல்லாசக் கோலம்!
இளமை ரத்தங்கள் ஊரும்!
உடலில் ஆனந்தம் ஏறும்!
இன்றும் என்றும் இன்ப மயம்!
தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு,
திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு,
வரவை மறந்து செலவு செய்து,
உயரப் பறந்து கொண்டாடுவோம்!
(கட்டழகு)
(எங்கேயும்)
காலை ஜப்பானில் காபி!
மாலை நியூயார்க்கில் காபரே!
இரவில் தாய்லாந்தில் ஜாலி!
இனிமேல் நமக்கென்ன வேலி?
இங்கும் எங்கும் நம்முலகம்!
உலகம் நமது பாக்கெட்டிலே!
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே!
இரவு பொழுது நமது பக்கம்!
விடிய விடிய கொண்டாடுவோம்!
(கட்டழகு)
(எங்கேயும்)
ஆடை இல்லாத மேனி!
அவன் பேர் அந்நாளில் ஞானி!
இன்றோ அது ஒரு ஹாபி!
எல்லோரும் இனிமேல் பேபி!
வெட்கம் துக்கம் தேவை இல்லை!
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டும்!
come on everybody!
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்!
join me...! ஹே! ஹே! ஹே! ஹே!
(தட்டட்டும்)
கடவுள் படைத்த உலகம் இது,
மனித சுகத்தை மறுப்பதில்லை!
(கட்டழகு)
(எங்கேயும்)

0 Comments:

Post a Comment

<< Home