Friday, February 17, 2006

40.மோகத்தில் தவிக்கும் இரு காதல் மேகங்கள்.

இந்தப் பாடலுக்குக் கவிஞர், முதலில் எழுதிய பல்லவி,
"திராட்சை ரசம் வழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது" என்பது! பின் என்ன காரணத்தாலோ வரிகள் மாற்றப்பட்டன. இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் வந்த பல பாடல்களில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததொரு பாடல் இது.....! இந்தக் கூட்டணி பிரிந்ததில் ரசிகர்களுக்கே அதிக இழப்பு என்பது நிதர்சனமான உண்மை...!
----------------------------------------------------------
படம் : ராஜபார்வை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------------
ஆ:
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
(அந்தி)
பெ:
தேனில் வண்டு மூழ்கும்போது,....
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!
ஆ:
தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
(அந்தி)
ஆ:
தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!
பெ:
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!
(அந்தி)
பெ:
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
(அந்தி)

0 Comments:

Post a Comment

<< Home