Monday, April 10, 2006

71. ஐயங்காரு வீட்டு அழகே!

வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களுக்கு எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கும் பாடல்...! ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதியிருக்கிறார். கர்நாடக சங்கீதத்துடன் தொடங்கும் பாடல், பின் மெல்லிசைப் பாடலாக மாறுகிறது...! நல்ல மெட்டமைந்த பாடல்.
-------------------------------------------------------
படம் : அந்நியன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & ஹரிணி
-------------------------------------------------------
ஆ:
ஐயங்காரு வீட்டு அழகே!
(ஐயங்காரு)
உன் போல் அழகி பிறக்கவும் இல்லை!
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை!
பெ:
உன்போல் சமத்து உலகினில் இல்லை!
காதலன் சமத்து காதலில் தொல்லை!
ஆ:
அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே!
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே!
(ஐயங்காரு)
ஆ:
மகரந்தப் பொடிகளை எடுத்து - அதில்
மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து,
திருக் கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ?
ஒரு கோடிப்பூக்கள் கொண்டு ஜோடிப்பூக்கள் செய்தானோ?
பெ:
உன்னுதடு சேர்ந்தால், பூப்படையும் வார்த்தை!
நம்முதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை!
ஆ:
அள்ளிச் சேர்த்தேன் உந்தன் உயிருக்குள் அனுமதி ஒருமுறை!
(ஐயங்காரு)
பெ:
ஆ....! உச்சி வானைத் தட்டித்தாவி இழுத்து,
பொன் நட்சத்திரத் தோரணங்கள் சமைத்து,
நீ முத்துத்தாமப் பந்தற் கீழே மாலை கொள்வாயா?
உன் முத்தத்தாலே வானும் மண்ணும் ஈரம் செய்வாயா?
ஆ:
வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்!
ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்!
பெ:
தயங்காதே மெல்லத் தொடங்கட்டும் அழகிய தவறுகள்!
(ஐயங்காரு)

0 Comments:

Post a Comment

<< Home