Monday, May 08, 2006

93. இன்னொரு பூமி...தாய்!

தாயின் பெருமை சொல்லும் இன்னொரு அற்புதமான பாடல். ஜேசுதாஸின் அற்புதமான குரலில் ஒலிக்கும் பாடல்! படமாக்கப்பட்ட விதமும் அருமை.
--------------------------------------------------
படம் : ராம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : சினேகன்
குரல் : K.J.ஜேசுதாஸ்
--------------------------------------------------
ஆராரிராரோ! நான் இங்கே பாட,
தாயே நீ கண் உறங்கு! என்னோட மடி சாய்ந்து!
வாழும் காலம் யாவுமே, தாயின் பாதம் சுவர்க்கமே!

வேதம் நான்கும் சொன்னதே! அதை நான் அறிவேனே....!
அம்மா என்னும் மந்திரமே, அகிலம் யாவும் ஆள்கிறதே...!
(ஆராரிராரோ)
வேர் இல்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே!
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே!
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே!
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்!
(ஆராரிராரோ)
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா?
மண் பொன் மேலே ஆசை துரந்த
கண் தூங்காத உயிரல்லவா?
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ!
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ!
இறைவா! நீ ஆணையிடு!
தாயே எந்தன் மகளாய் மாற...!
(ஆராரிராரோ)

0 Comments:

Post a Comment

<< Home