Sunday, April 30, 2006

86. போனால் போகட்டும் போடா!

பழைய பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் Default Favouriteஆக இந்தப்பாடல் பெரும்பாலும் இருக்கும். கண்ணதாசனின் வரிகளின் நுட்பத்தை அறிய விரும்புபவர்கள் இந்த ஒரு பாடலைக் கேட்டாலே போதும்.
-----------------------------------------------------
படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
குரல் : T.M.சௌந்தரராஜன்
-----------------------------------------------------
போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

0 Comments:

Post a Comment

<< Home