Friday, April 28, 2006

83. நெஞ்சில் நீங்காத தென்றல்

நல்ல மென்மையான பாடல், நல்ல திகில் படத்தில். வாலியின் வரிகள் அருமை. இசையும் அற்புதம்.
---------------------------------------------
படம் : கலைஞன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ் & ஜானகி
---------------------------------------------
ஆ:
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா!
(எந்தன்)
இசையின் ஸ்வரங்கள் தேனா?
இசைக்கும் குயில் நீதானா? வா....!
ஆ:
பனியில் நனையும் மார்கழிப் பூவே!
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே?
பெ:
உனக்கென பிறந்தவள் நானா?
நிலவுக்குத் துணை இந்த வானா?
ஆ:
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...!
(எந்தன்)
பெ:
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்!
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்!
ஆ:
உதடுகள் உரசிடத்தானே..!
வலிகளும் குறைந்திடும் மானே...!
பெ:
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...!
(எந்தன்)

0 Comments:

Post a Comment

<< Home