Thursday, May 11, 2006

94. கண்ணாளனே!

தனிமையில் அமர்ந்து ரசிக்கக்கூடிய பாடல்களில் ஒன்று இது! காதல் விதை விழுந்த ஒரு பெண் மனதின் உணர்வுகளை அழகாக எழுதி இருப்பார் வைரமுத்து. என் விருப்பப்பாடகி சித்ராவின் பாடல்களில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு பாடல் இது....!
--------------------------------------------------------------------
படம் : பம்பாய்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : சித்ரா & குழு
---------------------------------------------------------------------
கு:
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்! குமுசுமு குப்புச்சுப்!
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்! குமுசுமு குப்புச்சுப்!
சல சல சல சல சோலைக்கிளியே! ஜோடியைத் தேடிக்கோ!
சிலு சிலு சிலு சிலு சக்கரை நிலவே! மாலையை மாத்திக்கோ!
மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ!
மாமன் சொன்ன சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ!
மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ!
மாமன் சொன்ன சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ!
சி:
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை!
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை?
ஆளான ஒரு சேதி அறியாமலே....
அலைபாயும் சிறு பேதை நானோ?
உன் பேரும் என் பேரும் தெரியாமலே...
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ?
வாய் பேசவே வாய்ப்பில்லையே,
வலி தீர வழி என்னவோ...?
(கண்ணாளனே)
உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம், நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்!
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம், கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்!
ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல...!
சித்தம் துடிதுடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல...!
பனித்துளிதான் என்ன செய்யுமோ?
மூங்கில் காட்டில் தீ விழும்போது,
மூங்கில் காடென்று ஆயினள் மாது!
(கண்ணாளனே)
ஒரு மின்சாரம் பார்வையின் வேகம், வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்!
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்!
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை!
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை!
இது கனவா? இல்லை நினைவா?
என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்..!
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்!
(கண்ணாளனே)

0 Comments:

Post a Comment

<< Home