Friday, July 07, 2006

96. நானே நாதம்..!

சந்தங்களில் வைரமுத்து கட்டிய இன்னொரு கோட்டை இந்தப்பாடல். பாரதிராஜா எழுதிய இன்னொரு உணர்ச்சிக் காவியம், இந்தக் காதல் ஓவியம். இளையராஜாவின் இசை, வார்த்தைகளைத் தாண்டி ஆராதிக்கப்படவேண்டிய ஒன்று!
-----------------------------------------------------
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------------
நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்!
பூவில் வண்டு, கூடும் கண்டு, பூவும் கண்கள் மூடும்!
பூவினம் மாநாடு போடும், வண்டுகள் சங்கீதம் பாடும்....!

பூவினம் மாநாடு போடும், வண்டுகள் சங்கீதம் பாடும்....!
(நம்தம் )
(பூவில்)
ராகம் ஜீவனாகும், நெஞ்சின் ஓசை தாளமாகும்!
கீதம் வானம் போகும், அந்த மேகம் பாலமாகும்!
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்...!
நாதம் ஒன்று போதும், எந்தன் ஆயுள் கோடி மாதம்!
தீயில் நின்றபோதும், அந்தத் தீயே வெந்து போகும்!
நானே நாதம்...ஆ...!

தனம்த...
(நம்தம்)
(பூவில்)
வானம் என் விதானம், இந்த பூமி சந்நிதானம்!
பாதம் மீது மோதும், ஆறு பாடும் சுப்ரபாதம்!
ராகம் மீது தாகம், கொண்டு ஆறும் நின்று போகும்!
காற்றின் தேசம் எங்கும், எந்தன் கானம் சென்று தங்கும்!
வாழும் லோகமேழும், எந்தன் நாதம் சென்று ஆடும்!

தனம்த...
(நம்தம்)
(பூவில்)

0 Comments:

Post a Comment

<< Home