Friday, July 07, 2006

97. கண்ணீரே! கண்ணீரே!

மணிரத்னத்தின் அழகான காட்சியமைப்பு இப்பாடலின் மிகப்பெரிய பலம். மொழி மாற்றம் செய்யப்பட்ட படமாக இருந்தாலும் மிக அற்புதமான வரிகளை வழங்கியிருக்கிறார் வைரமுத்து. இசையும் அருமை! சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மனதிலேயே நிற்கிறது.
----------------------------------------------------
படம் : உயிரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான், அனுராதா & பெபி
----------------------------------------------------
இரு பூக்கள் கிளை மேலே!
ஒரு புயலோ அலை மேலே!
உயிர் ஆடும் திகிலாலே,
என் வாழ்வின் ஓரம் வந்தாயே, செந்தேனே...!
(இரு)
கண்ணீரே! கண்ணீரே! சந்தோஷக் கண்ணீரே...!
கண்ணீரே...!
தேடித் தேடித் தேய்ந்தேனே,
மீண்டும் கண்முன் கண்டேனே, பெண்ணே பெண்ணே!
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே!
கண்ணே கண்ணே காணாய் கண்ணே!
(கண்ணீரே)
உன் பார்வை பொய்தானா?
பெண்ணென்றால் திரைதானா?
பெண் நெஞ்சே சிறைதானா...? சரிதானா...?
பெண் நெஞ்சில் மோகம் உண்டு,
அதில் பருவத் தாபம் உண்டு,
பேராசைத்தீயும் உண்டு!
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று?
புதிர் போட்ட பெண்ணே நில் நில்!
பதில் தோன்றவில்லை சொல் சொல்!
கல்லொன்று தடைசெய்த போதும்,
புல்லொன்று புதுவேர்கள் போடும்,
நம் காதல் அது போல மீறும்.....
(கல்லொன்று)
(தேடித்)
பால் நதியே நீ எங்கே?
வரும் வழியில் மறைந்தாயோ?
பல தடைகள் கடந்தாயோ? சொல் கண்ணே...
பேரன்பே உந்தன் நினைவு,
என் கண்ணைச் சுற்றும் கனவு,
இது உயிரைத் திருடும் உறவு,
உன் துன்பம் என்பது வரவு,
ஏ மர்ம ராணி நில் நில்!
ஒரு மோக வார்த்தை சொல் சொல்!
உன்னோடு நான் கண்ட பந்தம்,
மண்ணோடு மழை கொன்ட சொந்தம்,
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்!
(உன்னோடு)
(கண்ணீரே)

0 Comments:

Post a Comment

<< Home