Wednesday, March 28, 2007

108. கத்தியில்லாமலே கொய்கிறது பெண்ணின் நினைவு

அமைதியான இசை, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பாடல். நல்ல திரைப்படமும் கூட. நண்பர் ஞானசேகரின் விருப்பப்பாடல் தேர்வில் நான் பதிப்பிக்கும் முதல் பாடல் இது.
என்னைக் கவர்ந்த வரிகள்,
"இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?"

"ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!"

------------------------------------
படம் : அழகிய தீயே
இசை : ரமேஷ் விநாயகம்
வரிகள் : ?
குரல் : ரமேஷ் விநாயகம் & குழு
------------------------------------
ஆ:
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ.....யே!
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ.....யே!
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ.....யே!
(விழிகளின்)
ஆ:
பூ போன்ற கன்னித்தேன்
அவள் பேர் சொல்லித் தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்,
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்,
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும் ஓ.....யே!
கு:
பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!
ஆ:
கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்,
இனி நில் என்னும் ஓர் நெஞ்சம்,
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது ஓ.....யே!
(விழிகளின்)

2 Comments:

Blogger J S Gnanasekar சொல்கிறார்.....

முதல் thanks.

- j s gnanasekar

March 28, 2007 3:04 AM  
Blogger Bee'morgan சொல்கிறார்.....

எனக்குப்பிடித்த வரிகள் இவை..

காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
___

கேட்கையில் நம்மையுமறியாமல் தாளம் போட வைக்கும் பாடலிது. :)

August 22, 2007 8:19 AM  

Post a Comment

<< Home