Monday, July 10, 2006

103. முள்ளோடுதான் முத்தங்களா? சொல்! சொல்!

என்ன ஒரு காதல்...? என்ன ஒரு கவிதை? வைரமுத்து வைரமுத்துதான். தன் முதல் படியிலேயே எல்லோரின் இதயக்கதவுகளையும் தட்டி வைக்கிறார் A.R.ரஹ்மான். ஒளி, ஒலி இரண்டுமே அருமை!
----------------------------------------------------
படம் : ரோஜா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & சுஜாதா
----------------------------------------------------
ஆ:
காதல் ரோஜாவே! எங்கே நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணில்!
கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்,
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்!
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
(காதல்)
பெ:
ல...லா...லா..லா....
ஆ:
தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலை தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்த்ததில்
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் ரெண்டு சேர்வதில்
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா? சொல்!சொல்!
(காதல்)
பெ:
ல...லா...லா..லா....
ஆ:
வீசுகின்ற தென்றலே
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ!
பூவளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்து போ!
பாவை இல்லை பாவை,
தேவை என்ன தேவை!
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா? சொல்! சொல்!
(காதல்)

2 Comments:

Blogger நாமக்கல் சிபி சொல்கிறார்.....

அருமையான பாடலிது.
ரோஜா திரைப்படத்தை நான் பல முறை பார்த்ததற்கு இப்பாடலே காரணம். இன்னும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன்.

July 10, 2006 9:25 PM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

வருகைக்கு நன்றி!


ப்ரியமுடன்,
சேரல்.

July 10, 2006 9:29 PM  

Post a Comment

<< Home