Saturday, July 08, 2006

100. ஓர் அழகான தமிழ் மழை!

இந்தப் பாடலை ஒருமுறை மட்டுமே கேட்டிருக்கிறேன். இப்பாடல்தான் என் வலைப்பூவின் 100 வது பாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பியதோடு, இதன் வரிகளையும் அனுப்பிய நண்பன் சுரேஷிற்காக இந்தப் பாடல். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் எனத் தெரியவில்லை.
----------------------------------------------------
படம் : ஜூன் R
இசை : சரத்
வரிகள் :
குரல் : ஹரிஹரன்
----------------------------------------------------
மழையே மழையே
நீரின் திரையே
வானம் தெளிக்கும்
கவிதைத் துளியே


மேகத்தின் சிறு பொறியே
நீல வானமே

ஒரு தறியில்லாமல் நீரின் நூலில் மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே இயற்கை அழகே


ரிம் ஜிம்

(மழையே)

பூமி தேகமே அதில் விழும் மழை துளி இந்த உலகின் ஜீவன் ஆகுமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்

வறண்ட பாலைகளே
ஆகும் சோலைகளே
வானம் அன்னதானம் இந்த மழை நீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையேயயயயய...


(மழையே)

ஆறைத் தாண்டியே உடல் மனம் உயிர் தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே மழை தொடும்
மண்ணுக்குள் வாசம் தோன்றும்

நதியும் குளிக்கின்றதே
நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம்
நனைவேன் நானே

ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்


(மழையே)

0 Comments:

Post a Comment

<< Home