115. பத்தும் பறந்து போகும் காதல் வந்தால்!
காதலும் தமிழும் பொங்கி வழிகின்றன இந்தப் பாடலில். வைரமுத்து வைரமுத்துதான்! ரஹ்மானின் இசை காதலின் வெறியைக் கண்முன் நிறுத்துகிறது. பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை! தன் கடல் காதலை இந்தப் பாடலிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாலச்சந்தர். ஜேசுதாசும் நன்றாகவே பாடி இருக்கிறார்.
--------------------------------------
படம் : டூயட்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
--------------------------------------
வெண்ணிலாவின் தேரிலேறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!
மானமுள்ள ஊமை போல
தானம் கேட்கக் கூசி நின்றேனே!
நிறம் கண்டு முகம் காண்டா நேசம் கொண்டேன்? அவள்
நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
(வெண்ணிலா)
அட கை நீட்டும் தம்பியே - எனைக்
கட்டி வைத்தாள் அன்னையே - நீ
வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே!
(அட)
(நிறம்)
காலழகு, மேலழகு கண்கொண்டு கண்டேன் - அவள்
நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து, மாயம் செய்தாளே!
(அட)
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் - இல்லை
செந்தாமரை பாதத்தில் செருப்பாகப் பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது
(அட)
--------------------------------------
படம் : டூயட்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
--------------------------------------
வெண்ணிலாவின் தேரிலேறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!
மானமுள்ள ஊமை போல
தானம் கேட்கக் கூசி நின்றேனே!
நிறம் கண்டு முகம் காண்டா நேசம் கொண்டேன்? அவள்
நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
(வெண்ணிலா)
அட கை நீட்டும் தம்பியே - எனைக்
கட்டி வைத்தாள் அன்னையே - நீ
வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே!
(அட)
(நிறம்)
காலழகு, மேலழகு கண்கொண்டு கண்டேன் - அவள்
நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து, மாயம் செய்தாளே!
(அட)
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் - இல்லை
செந்தாமரை பாதத்தில் செருப்பாகப் பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது
(அட)
2 Comments:
கானம் கேட்கக் கூசி நின்றேனே!
dhaanam illaiya??? konjam sariyanu paarunga.
நன்றி Anony!
தானம் என்பதே சரி.
தவறைத் திருத்தி விட்டேன்.
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment
<< Home