Friday, April 20, 2007

120. காலங்களில் அவள் வசந்தம்

காலங்களைக் கடந்து ஒலிக்கும் ஒரு ரம்மியமான பாடல். கண்ணதாசனின் வரிகளா? இல்லை M.S.விஸ்வநாதனின் இசையா? இல்லை P.B.ஸ்ரீநிவாஸின் குரலா? என்று தெரியாமல் இந்தப் பாடலில் ஏதோ ஒன்று என்னை மயக்குகிறது.
--------------------------------------------
படம் : பாவ மன்னிப்பு
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.B.ஸ்ரீநிவாஸ்
--------------------------------------------
காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்)
பறவைகளில் அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு!
பறவைகளில் அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு!
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்!
(காலங்களில்)
பால்போல் சிரிப்பதில் பிள்ளை, பனி போல் அணைப்பதில் கன்னி
பால்போல் சிரிப்பதில் பிள்ளை, பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை..!
(காலங்களில்)

0 Comments:

Post a Comment

<< Home