Thursday, April 19, 2007

118. தவணை முறையில் நேசிக்கிறேன், இசையை

கேட்கும்போதெல்லாம் என்னை நிலைகுலையச் செய்துவிடும் ஒரு பாடல். வைரமுத்துவின் 'பெய்யெனப் பெய்யும் மழை' கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை வரிகள் இவை. காதுகளின் வழி இதயத்தில் நுழைந்து ஏதோ செய்கிறார் A.R.ரஹ்மான் . பாடல் காட்சியில் மணிரத்னமும், P.C.ஸ்ரீராமும் இணைந்து அசத்தி இருக்கிறார்கள். சுவர்ணலாதாவின் குரல் மனதைப் பிசைகிறது. எனக்குப் பிடித்த வரிகள் எல்லா வரிகளும்.
--------------------------------------
படம் : அலைபாயுதே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : சுவர்ணலதா
--------------------------------------
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
(எவனோ)
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
(எவனோ)
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
(எவனோ)
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா?
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா?
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா?
எந்தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிறிதில்லையே!
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே...!
(எவனோ)

0 Comments:

Post a Comment

<< Home