Thursday, April 19, 2007

117. மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே!

அழகான மெட்டில் அமைந்த தாலாட்டுப் பாடல். இந்த ஒரு பாடல் இளையராஜாவின் இசை ஞானத்துக்கு ஒரு சோற்றுப் பதம் எனலாம். வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் எனத்தெரியவில்லை. S.P.Bன் குரலில் ஒரு மெல்லிய தாய்மை இழையோடி இருக்கிறது இப்பாடலில்.
-------------------------------------
படம் : உதய கீதம்
இசை : இளையராஜா
வரிகள் : ?
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-------------------------------------
தேனே தென்பாண்டி மீனே!
இசை தேனே! இசைத்தேனே!
மானே இள மானே!
நீதான் செந்தாமரை, ஆரிராரோ!
நெற்றி மூன்றாம் பிறை, தாலேலேலோ!
(தேனே)
மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே!
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே!
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு
நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு
மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
(தேனே)
பால் கொடுத்த நெஞ்சிலே ஈரமின்னும் காயலே!
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே!
பாதை கொஞ்சம் மாறிப்போனால்
பாசம் விட்டுப் போகுமா?
தாழம்பூவை தூர வைத்தால்
வாசம் விட்டுப் போகுமா?
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை
(தேனே)

0 Comments:

Post a Comment

<< Home