Tuesday, April 11, 2006

72. என்னம்மா கண்ணு?

இந்தப் பாடல் வரிகளைப் படிக்கும்போதே பாடலின் இசை நம் மனதை ஆட்கொள்கின்றது! அந்த அளவுக்கு மேற்கத்திய இசையை திறமையாகக் கையாண்டிருப்பார் இளையராஜா! பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் ஒரு பாடல்! பல இசை ரசிகர்களின் All Time Favourite ஆக இந்தப் பாடல் கண்டிப்பாக இருக்கும்.
--------------------------------------------------------
படம் : மிஸ்டர் பாரத்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
--------------------------------------------------------
ம:
என்னம்மா கண்ணு?
பா:
சொல்லம்மா கண்ணு!
ம:
என்னம்மா கண்ணு செளக்கியமா?
பா:
ஆமாம்மா கண்ணு செளக்கியந்தான்!
ம:
யானைக்குச் சின்னப்பூனை போட்டியா? - துணிஞ்சு
மோதித்தான் பட்டபாடு பாத்தியா?
பா:
யாருக்கும் அஞ்சிடாத சிங்கந்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கந்தான்!
(என்னம்மா)
ம:
வெள்ளிப் பணம் என்னிடத்தில் கொட்டிக் கிடக்கு!
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு?
பா:
சத்தியத்தைப் பேசுகின்ற நெஞ்சம் இருக்கு!
உத்தமனா நீயிருந்தா மீசை முறுக்கு!
ம:
சத்தியத்தை நம்பி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
லாபமில்லை தம்பி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
பா:
நிச்சயமா நீதி ஹா ஹா ஹா ஹா ஹா!
வெல்லும் ஒரு தேதி ஹா ஹா ஹா ஹா ஹா!
ம:
உன்னால தான் ஆகாது, வேகாது!
பா:
கொஞ்சந்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும்...ஹா!
(என்னம்மா)
ம:
எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்லே!
என்னுடைய சொல்லையாரும் தட்டியதில்லே!
பா:
இன்னொருவன் என்னவந்து தொட்டதுமில்லே!
தொட்டவனைத் தப்பிக்க நான் விட்டதுமில்லே!
ம:
மீசையிலே மண்ணு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
ஒட்டினதை எண்ணு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ!
பா:
பாயும் புலி நான் தான் ஹா ஹா ஹா ஹா ஹா!
பாக்கப்போறே நீ தான் ஹா ஹா ஹா ஹா ஹா!
ம:
சும்மாவுந்தான் பூச்சாண்டி காட்டாதே!
பா:
நம்மகிட்டே போடுறியே தப்புத்தாளந்தான்...ஹா!
(என்னம்மா)

2 Comments:

Blogger Sud Gopal சொல்கிறார்.....

Vaali or Vairamuthu???

April 28, 2006 12:29 AM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

I think It's Vaali only.

April 28, 2006 1:01 AM  

Post a Comment

<< Home