Tuesday, April 11, 2006

73. வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்!

ரஜினி படப் பாடல்கள் என்றாலே ஓர் உத்வேகம், எழுச்சி எல்லாம் இருக்கும். இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. வைரமுத்துவின் வரிகள் சோர்ந்து போனவர்களுக்கு நல்லதொரு மருந்து..! எனக்குப் பிடித்த வரிகள்....
"மேடு பள்ளம் இல்லாமல், வாழ்வில் என்ன சந்தோஷம்?
பாறைகள் நீங்கினால், ஓடைக்கில்லை சங்கீதம்!"

--------------------------------------------------
படம் : அண்ணாமலை
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்!
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்!
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்!
அடே நண்பா! உண்மை சொல்வேன்!
சவால் வேண்டாம், உன்னை வெல்வேன்!
(வெற்றி)
இமயமலை ஆகாமல், எனது உயிர் போகாது!
சூரியன் தூங்கலாம், எனது விழி தூங்காது!
வேர்வை மழை சிந்தாமல், வெற்றி மலர் தூவாது!
எல்லையைத் தொடும் வரை, எனது கட்டை வேகாது!
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே!
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே!
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே!
(அடே நண்பா)
(வெற்றி)
இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்!
வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்!
மேடு பள்ளம் இல்லாமல், வாழ்வில் என்ன சந்தோஷம்?
பாறைகள் நீங்கினால், ஓடைக்கில்லை சங்கீதம்!
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே!
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே!
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே!
(அடே நண்பா)
(வெற்றி)

1 Comments:

Blogger ஜெ. ராம்கி சொல்கிறார்.....

//என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்!
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்!


this is dedicated to Thiruva annan!

April 12, 2006 1:59 AM  

Post a Comment

<< Home