Tuesday, April 11, 2006

74. நான் தான் சகலகலா வல்லவன்!

இளையராஜா, வாலி கூட்டணியில் அமைந்த துள்ளிசைப் பாடல்...! ஒவ்வொரு புத்தாண்டிலும் எல்லா திசைகளிலும் ஒலிக்கக்கூடிய பாடல் இது...!
-----------------------------------------------------
படம் : சகலகலாவல்லவன்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
-----------------------------------------------------
Hai Everybody..! Wish u a happy new year!
இளமை இதோ..! இதோ...!
இனிமை இதோ..! இதோ...!
காலேஜ் டீனேஜ் பெண்கள்,
எல்லோர்க்கும் என் மீது கண்கள்!
(இளமை)
வாலிபத்தில் மன்மதன், லீலைகளின் மன்னவன்!
ராத்திரியில் சந்திரன், ரசிகைகளின் இந்திரன்!
நானாடும் ஆட்டம் பாருங்கள்... நிகரேது கூறுங்கள்!
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்... கைத்தாளம் போடுங்கள்!
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்....!
நான் தான் சகலகலா வல்லவன்!
(இளமை)
இந்தியிலும் பாடுவேன், வெற்றி நடை போடுவேன்!
ஏக் து ஜே கேலியே, ஏண்டி நீ பாத்தியே!
எனக்காக ஏக்கம் என்னம்மா? களத்தூரின் கண்ணம்மா!
உனக்காக வாழும் மாமன் நான், கல்யாண ராமன் தான்!
நாள்தோறும் நான் ஆள் மாறுவேன்...!
நான் தான் சகலகலா வல்லவன்!
(இளமை)
கம்பெடுத்து ஆடுவேன், கத்திச் சண்டை போடுவேன்!
குத்துவதில் சூரன் நான், குஸ்திகளில் வீரன் தான்!
எனை யாரும் ஏய்த்தால் ஆகாது, அதுதானே கூடாது!
எனை வெல்ல யாரும் கிடையாது, எதிர்க்கின்ற ஆளேது?
யார் காதிலும் பூச்சுற்றுவேன்....!
நான் தான் சகலகலா வல்லவன்!
(இளமை)

1 Comments:

Blogger ஜெ. ராம்கி சொல்கிறார்.....

/யார் காதிலும் பூச்சுற்றுவேன்....!
நான் தான் சகலகலா வல்லவன்!

heee...hee... this i like to dedicate to Kalaingar aiyaa!

April 12, 2006 1:58 AM  

Post a Comment

<< Home