Thursday, April 27, 2006

79. வானவில்லின் துண்டு...அவள்!

என் விருப்பப் பாடல்களில் இன்னொன்று. சமூக உணர்வோடு கூடிய ஒரு படத்தில் அமைந்த ஒரு காதல் பாடல். வரிகள் அனைத்தும் வைரம்தான். எனக்குப் பிடித்த வரிகள்,
"வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து,
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....!"

-----------------------------------------------------------
படம் : கருத்தம்மா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & சித்ரா
-----------------------------------------------------------
ஆ:
தென்மேற்குப் பருவக்காற்று,
தேனிப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்!
தெம்மாங்கு பாடிக்கொன்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்!
பெ:
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டு விட,
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க....
(தென்மேற்கு)
ஆ:
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்,
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்!
பெ:
தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்,
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்!
ஆ:
மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ?
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே!
பெ:
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ?
நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே....!
(தென்மேற்கு )
பெ:
நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
நாமென்ற ஒரு வார்த்தை உண்டானதே!
ஆ:
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
ஆளென்ற ஒரு வார்த்தை உண்டானதே!
பெ:
காதலென்ற மந்திரத்தின் மாயம் என்ன?
கள்ளும் முள்ளும் இப்போது பூவானதே!
ஆ:
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து,
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....!
(தென்மேற்கு)

2 Comments:

Blogger Chandravathanaa சொல்கிறார்.....

inimaiyana padal

April 27, 2006 11:41 PM  
Blogger சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.....

எனக்கும் அந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும்.

April 28, 2006 12:59 AM  

Post a Comment

<< Home