Friday, April 28, 2006

81. கண்களைத் திறந்து கொண்டு கனவு காண்கிறது...காதல்!

இனிமையான இசை, நல்ல வரிகள், நல்ல குரல்வளம், எல்லாம் இருந்தும் இந்தப் பாடல் தகுதியான பிரபலத்தைப் பெறவில்லை. என் விருப்பப்பாடல்களில் ஒன்று.
-----------------------------------------------------
படம் : உயிரோடு உயிராக
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & சித்ரா
-----------------------------------------------------
பெ:
அன்பே அன்பே நீ என் பிள்ளை!
தேகம் மட்டும் காதல் இல்லை!
பூமியில் நாம் வாழும் காலந்தோறும்,
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்!
பெ:
கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழக்க...
ஆ:
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்
என்னை என்னை உடைக்க...
பெ:
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
ஆ:
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
பெ:
உன் பொன்விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
(அன்பே)
ஆ:
யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க...
பெ:
யாரைப் பெண்ணென்பது யாரை ஆணென்பது
ஒன்றில் ஒன்று அடங்க
ஆ:
உச்சியில் தேன் விழுந்தே என் உயிருக்குள் இனிக்குதடி
பெ:
மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுக பழையபடி
ஆ:
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளுமடி
(அன்பே)

0 Comments:

Post a Comment

<< Home