Friday, April 28, 2006

82. பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிப்பதில்லை!

இப்போது மிகப் பிரபலமாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று! வித்தியாசமான மெட்டு. ஹரிஹரனின் குரலும், புதுவை நம்பி(யார் இவர்?)யின் வரிகளும் பாடலின் ஜீவன்.
------------------------------------------------
படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : புதுவை நம்பி
குரல் : ஹரிஹரன் & யுவன் ஷங்கர் ராஜா
------------------------------------------------
ஹ:
சின்னச் சின்னதாய்ப் பெண்ணே,
என் நெஞ்சில் முட்களாய்த் தைத்தாய்!
என் விழியை வாள் கொண்டு வீசி,
இளமனதில் காயங்கள் தந்தாய்!
துன்பம் மட்டும் என் உறவா?
உன்னை காதல் செய்ததே தவறா?
யு:
உயிரே! உயிரே!
ஹ:
காதல் செய்தால் பாவம்! பெண்மை எல்லாம் மாயம்!
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே!
பெண்கள் கண்ணில் சிக்கும், ஆண்கள் எல்லாம் பாவம்!
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே!
ஹ:
காதல் வெறும் மேகம் என்றேன்,
அடைமழையாய் வந்தாய்!
மழையோடு நனைந்திட வந்தேன்,
நீ தீயை மூட்டினாய்!
மொழியாக இருந்தேனே...!
உன்னால் இசையாக மலர்ந்தேனே!
என் உயிரோடு கலந்தவள் நீதான், ஏ! பெண்ணே!
கனவாகி கலைந்ததும் ஏனோ? சொல் கண்ணே!
மெளனம் பேசியதே! உனக்கது தெரியலையா?
காதல் வார்த்தைகளை, கண்கள் அறியலையா?
யு:
நானன நனனன நானா...நன நானனா நானனா
நானன நனனன நானா...நன நானனா நானனா
(காதல்)
ஹ:
துணை இன்றித் தனியாய்ச் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்!
விடை தேடும் மாணவனானேன்!
என் விடையும் நீ என,
வந்தாயே என் வழியில்...!
காதல் தந்தாயே உன் மொழியில்...!
என் நெஞ்சில் காதல் வந்து, நான் சொன்னேன்
உன் காதல் வேறோர் மனதில், எனை நொந்தேன்!
கண்கள் உள்ள வரை காதல் அழிவதில்லை!
பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிப்பதில்லை!
யு:
நானன நனனன நானா...நன நானனா நானனா
நானன நனனன நானா...நன நானனா நானனா

(காதல்)

1 Comments:

Blogger Bee'morgan சொல்கிறார்.....

hi சேரா, இதே மெட்டில் இன்னும் ஒரு பாட்டு இருக்கே..

"கண்ணின் காந்தமே வேண்டாம்.. உன் மனதின் சாந்தமே போதும்.."

அதன் வரிகள் கிடைக்குமா?

February 26, 2008 11:15 PM  

Post a Comment

<< Home