Friday, April 20, 2007

121. ஒரு போர்க்களமும், இரு பூக்களும்

பலரின் விருப்பப் பாடலாக இருக்கக்கூடிய ஒரு பாடல். பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை. வாலியின் வரிகள் காதலின் வேதனை சொல்கின்றன. இளையராஜாவின் இசை பற்றிச் சொல்லத் தேவை இல்லை. S.P.B, S. ஜானகி இணையில் வெளிவந்த பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது. எனக்குப் பிடித்த வரிகள்,
"வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்"

-------------------------------------------
படம் : தளபதி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
-------------------------------------------
ஆ:
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ:
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ:
நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
(சுந்தரி)
பெ:
வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா?
பாய்விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?
ஆ:
ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெ:
தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை?
ஆ:
வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை!
பெ:
எனைத்தான் அன்பே மறந்தாயோ?
ஆ:
மறப்பேன் என்றே நினைத்தாயோ?
(என்னையே)
பெ:
சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
ஆ:
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
பெ:
கோடி சுகம் வாராதோ நீயெனைத் தீண்டினால்
ஆ:
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
பெ:
உடனே வந்தால் உயிர் வாழும்
ஆ:
வருவேன், அந்நாள் வரக் கூடும்
(சுந்தரி)

0 Comments:

Post a Comment

<< Home