Friday, April 20, 2007

122. வாழ்க்கையின் நிறம் சிவப்பு!

புலமைப்பித்தனின் வரிகள் சிவப்பு வண்ணம் தீட்டி நிற்கின்றன. கம்யூனிஸத்திற்கு என்ன ஒரு அழகான வெளிப்பாடு? இந்தப் பாடல் மட்டும் இல்லை. மொத்தப் படமுமேதான். இளையராஜா முதல், முகம் தெரியாத கலைஞர்கள் வரை , பாடலில் பணியாற்றிய அனைவருமே தங்கள் பணியைத் திறம்பட செய்திருக்கிறார்கள். எப்போது கேட்டாலும் ரசிப்பதுடன் சிந்திக்கவும் தூண்டும் ஒரு பாடல் இது!
---------------------------------------------
படம் : உன்னால் முடியும் தம்பி
இசை : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------
புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை
வீதிக்கொரு கட்சி உண்டு
சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்க நாதி இல்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை
இது நாடா இல்லை வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
இது நாடா இல்லை வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
(புஞ்சை)
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு உழைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும், ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு!
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு!
(புஞ்சை)
ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கொண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே!
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே!
சேரியில் தென்றல் வீசாதா? ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?
(புஞ்சை)

0 Comments:

Post a Comment

<< Home