Tuesday, April 24, 2007

124. அந்திமத்தில் வீசுது பூங்காத்து

வைரமுத்துவுக்கு தேசிய விருதினைப் பெற்றுத்தந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இவர் மொத்தம் ஐந்து முறை தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் அமைந்த அற்புதமான பாடல்களில் ஒன்று. சிவாஜி கணேசனின் இறுதி காலத்தில் வந்த படங்களில், மலேசியா வாசுதேவனின் குரல் அவருக்கு மிகப் பொருத்தமாக இருந்ததாகத் தோன்றுகிறது.
----------------------------------------------
படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
----------------------------------------------
ஆ:
பூங்காத்து திரும்புமா? என் பாட்ட விரும்புமா?
பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?
(பூங்காத்து)
பெ:
ராசாவே வருத்தமா? ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே! அத உலகம் தாங்காதே.
அடுக்குமா? சூரியன் கருக்குமா?
ஆ:
என்ன சொல்லுவேன்? என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
பெ:
இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஆ:
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி,
சொல்லாத சோகத்த சொன்னேனடி
பெ:
சொக ராகம் சோகந்தானே!
சொக ராகம் சோகந்தானே!
ஆ:
யாரது போரது?
பெ:
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?
(பூங்காற்று)
ஆ:
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
பெ:
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்
ஆ:
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே!
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே!
பெ:
எசப்பாட்டு படிச்சேன் நானே
எசப்பாட்டு படிச்சேன் நானே
ஆ:
பூங்குயில் யாரது?
பெ:
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
ஆ:
அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி, மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே, ஒலகமே மறந்ததே!
பெ:
நான்தானே அந்தக் குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி, மனசுக்குள்ள காத்தாடி,
பறந்ததா? ஒலகந்தான் மறந்ததா?

0 Comments:

Post a Comment

<< Home